Sunday, February 26, 2012

என் கண்ணம்மாவின் வைரத்துளிகள் - 3


கண்மூடும் போதெல்லாம் மறைவதற்கு,

கண்களால் பிறக்கவில்லை,

புரிந்ததால் பிறந்தது - உணர்வால் வளர்த்தது...

உன் அருகில் இருக்கும் பொழுது,

என் வார்த்தைக்கு மட்டுமே ஓய்வு..

கடலாக நிறைந்திருக்கும் உன் நினைவுகளிலிருந்து,

கரைசேர இயலவில்லை அலையாக பிறந்ததினால்..

மூடிய விழிகளுக்குள் உன் நினைவுகள் இன்றும்,

நினைவுகளில் நிறைத்து இருப்பவனுக்கு இனியவளின் வரிகள்..

No comments:

Post a Comment