Sunday, February 26, 2012

என் கண்ணம்மாவின் வைரத்துளிகள் - 3


கண்மூடும் போதெல்லாம் மறைவதற்கு,

கண்களால் பிறக்கவில்லை,

புரிந்ததால் பிறந்தது - உணர்வால் வளர்த்தது...

உன் அருகில் இருக்கும் பொழுது,

என் வார்த்தைக்கு மட்டுமே ஓய்வு..

கடலாக நிறைந்திருக்கும் உன் நினைவுகளிலிருந்து,

கரைசேர இயலவில்லை அலையாக பிறந்ததினால்..

மூடிய விழிகளுக்குள் உன் நினைவுகள் இன்றும்,

நினைவுகளில் நிறைத்து இருப்பவனுக்கு இனியவளின் வரிகள்..

Saturday, February 25, 2012

என் கண்ணம்மாவின் வைரத்துளிகள் - 2




உறவாய் பிறக்கவில்லை உரிமை சொல்லாமல் இருக்க..

மகிழ்ச்சி மட்டும் நிறைந்திருக்கவில்லை நட்பென கொள்ள..

இனிமையும், வளிமையும் சுமக்கவில்லை காதலென்று சொல்ல..

உறவுக்கும் மீறிய உணர்வு..

நட்புக்கும் மீறிய பகிர்வு..

காதலுக்கும் மீறிய பிரிவு..

நிறைத்து இருப்பதாக உணர்கிறேன் !!..

என் கண்ணம்மாவின் வைரத்துளிகள் - 1



புவியின் தோற்றம் அறியேன் !!..

உன் பூவிழி வளிமையும் அறியேன் !!..

உன் புன்னகையில் புதைந்து இருக்கும் அர்த்தமும் அறியேன் !!..

இன்று அறிந்தது ஒன்றே ஒன்று !!..

என்னுள் நீ !!..

நினைவாக ! கனவாக ! வார்த்தையாக !

இப்பொது என் தமிழாக !!..