
கண்மூடும் போதெல்லாம் மறைவதற்கு,
கண்களால் பிறக்கவில்லை,
புரிந்ததால் பிறந்தது - உணர்வால் வளர்த்தது...
உன் அருகில் இருக்கும் பொழுது,
என் வார்த்தைக்கு மட்டுமே ஓய்வு..
கடலாக நிறைந்திருக்கும் உன் நினைவுகளிலிருந்து,
கரைசேர இயலவில்லை அலையாக பிறந்ததினால்..
மூடிய விழிகளுக்குள் உன் நினைவுகள் இன்றும்,
நினைவுகளில் நிறைத்து இருப்பவனுக்கு இனியவளின் வரிகள்..