Monday, January 18, 2010

இது போதும் எனக்கு !!..


அதி காலை ஒளியில்
ஐந்து மணிப் பறவைகள் !!..
இருளை அகற்றும் சூரியஒளியில்
பள்ளியெழுச்சி பாடும் !!..
உன் பாதை கொலுசு சத்தம்
என் துயில் கொள்வேன் !!..
என் கண்கள் உன்னை காணும்
இது போதும் எனக்கு !!..


வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்
இது போதும் எனக்கு !!..


நிலா ஒளிரும் இரவு,
திசை தொலைந்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை
இது போதும் எனக்கு !!..

No comments:

Post a Comment