Tuesday, January 5, 2010

பாரதியின் அச்சம் இல்லை அச்சம் இல்லை !!..


அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே
இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரோடு போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

பச்சைஉநே ஐந்து வெ படைகள் வந்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

6 comments:

  1. அருமை

    ReplyDelete
  2. அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே

    இச்சகத்தில் உள்ளோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!!..

    துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!!..

    பிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை பெற்றுவிட்ட போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!!..

    இச்சை கொண்ட பொருள் எல்லாம் இழந்துவிட்ட போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!!..

    கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!!..

    நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டும் போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!!..

    பச்சையூன் அனியைந்த வேற்படைகள் வந்த போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!!..

    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!!..

    ReplyDelete