Tuesday, December 22, 2009

காணி நிலம் வேண்டும்


காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்; அங்கு

தூணில் அழகியதாய் -- நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய், அந்தக்

காணி நிலத்திடையே -- ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் ; அங்கு

கேணி யருகிலே -- தென்னை மரம்
கீற்று மிள நீரும்,

பத்துப் பன்னிரண்டு -- தென்னை மரம்
பக்கத்திலே வேணும் ; அங்கு

கத்துங் குயிலோசை -- சற்றே வந்து
காதிற் பட வேணும் ; என்ன்

சித்தம் மகிழ்திடவே -- நன்றாய் இளங்
தென்றல் வர வேணும்,

பாட்டுக் கலந்திடவே -- அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் ; -- எங்கள்

கூட்டுக் கிளியினிலே -- கவிதைகள்
கொண்டுதர வேணும் ; அந்த

காட்டு வெளியினிலே, -- அம்மா ! நின்றன்
காவலுற வேணும் ; - என்றன்

பாட்டுத்திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும் !!...




No comments:

Post a Comment