Tuesday, December 22, 2009

கண்ணம்மா என் காதலி


சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ ?..

வட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ ?..

பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்,

நட்ட நடுநிசியில் - தெரியும்
நசித் திரங்களடீ !!..

சோலை மல ரொளியோ - உனது
சுந்தர புன்னகைதான் ?

நீல கடலலையோ - உனது
நெங்சி லலைகளடீ !!..

கோலக் குயிலோசை - உனது
குரலி னிமையடீ !!..

வாலைக் குமரிடீ - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்..

சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திர மேதுக்கடீ ?

ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா
சாத்திர முண்டோடீ ?

மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப் பேனோடீ - இதுபார்
கன்னத்து முத்த மொன்று !!.. (கண்ணம்மா)

No comments:

Post a Comment