
சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ ?..
வட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ ?..
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்,
நட்ட நடுநிசியில் - தெரியும்
நசித் திரங்களடீ !!..
சோலை மல ரொளியோ - உனது
சுந்தர புன்னகைதான் ?
நீல கடலலையோ - உனது
நெங்சி லலைகளடீ !!..
கோலக் குயிலோசை - உனது
குரலி னிமையடீ !!..
வாலைக் குமரியடீ - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்..
சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திர மேதுக்கடீ ?
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா
சாத்திர முண்டோடீ ?
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப் பேனோடீ - இதுபார்
கன்னத்து முத்த மொன்று !!.. (கண்ணம்மா)
No comments:
Post a Comment