Tuesday, December 22, 2009

பாரதியின் நல்லதோர் வீணை



நல்லதோர் வீணை செய்தே அதை --
நலங்கெடப் புழுதியில் றிவதுண்டோ ?..

சொல்லடி, சிவசக்தி, -- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,

வல்லமை தாராயோ, -- இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கோ ?

சொல்லடி சிவசக்தி, -- நிலச்
சுமையென வாழ்திடப் புரிகுவையோ ?

விசையுறு பந்தினை போல -- உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனைக்கேட்டேன் -- நித்தம்
நவமென சுடர்தரும் உயீர்க்கேட்டேன்,

சையினைத் தீசுடினும் -- சிவ
சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன் ; இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ !!..

1 comment:

  1. நன்று அருண்....மிக்க நன்று....
    என் நண்பன் என்பதை நிருபித்து விட்டாய்....
    மகிழ்ச்சி....

    தமிழ் பித்தன்
    வினோத்

    ReplyDelete