
நல்லதோர் வீணை செய்தே அதை --
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?..
சொல்லடி, சிவசக்தி, -- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, -- இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கோ ?
சொல்லடி சிவசக்தி, -- நிலச்
சுமையென வாழ்திடப் புரிகுவையோ ?
விசையுறு பந்தினை போல -- உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனைக்கேட்டேன் -- நித்தம்
நவமென சுடர்தரும் உயீர்க்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் -- சிவ
சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் ; இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ !!..
நன்று அருண்....மிக்க நன்று....
ReplyDeleteஎன் நண்பன் என்பதை நிருபித்து விட்டாய்....
மகிழ்ச்சி....
தமிழ் பித்தன்
வினோத்