
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்; அங்கு
தூணில் அழகியதாய் -- நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய், அந்தக்
காணி நிலத்திடையே -- ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் ; அங்கு
கேணி யருகிலே -- தென்னை மரம்
கீற்று மிள நீரும்,
பத்துப் பன்னிரண்டு -- தென்னை மரம்
பக்கத்திலே வேணும் ; அங்கு
கத்துங் குயிலோசை -- சற்றே வந்து
காதிற் பட வேணும் ; என்றன்
சித்தம் மகிழ்திடவே -- நன்றாய் இளங்
தென்றல் வர வேணும்,
பாட்டுக் கலந்திடவே -- அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் ; -- எங்கள்
கூட்டுக் கிளியினிலே -- கவிதைகள்
கொண்டுதர வேணும் ; அந்த
காட்டு வெளியினிலே, -- அம்மா ! நின்றன்
காவலுற வேணும் ; - என்றன்
பாட்டுத்திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும் !!...