Monday, January 18, 2010

இது போதும் எனக்கு !!..


அதி காலை ஒளியில்
ஐந்து மணிப் பறவைகள் !!..
இருளை அகற்றும் சூரியஒளியில்
பள்ளியெழுச்சி பாடும் !!..
உன் பாதை கொலுசு சத்தம்
என் துயில் கொள்வேன் !!..
என் கண்கள் உன்னை காணும்
இது போதும் எனக்கு !!..


வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்
இது போதும் எனக்கு !!..


நிலா ஒளிரும் இரவு,
திசை தொலைந்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை
இது போதும் எனக்கு !!..

Tuesday, January 5, 2010

நண்பா உன் பிரிவில் !!..


நட்பில் கவலைக்கு இடமில்லை


சோற்றுக்கு வழி இல்லாத போதும்
சுருட்டுக்கு மட்டும் பஞ்சமில்லை


வகுப்பு ஏட்டில் பெயர் இருக்கிறது, ஆள் யார்?
அது வாத்தியருக்கு விளங்கவில்லை


ஆறு மாதம் முக்கி முக்கி படிக்க வேண்டியதை
ஒரே இரவில் எப்படி படித்தோமோ தெரியவில்லை


ஒரே வண்டியில் நான்கு பேர் சென்று
சறுக்கி விழுந்த போது வலி தெரியவில்லை


எதையும் நண்பணிடத்தில் மறைத்ததில்லை
சுற்றுச் சூழலை நினைத்ததில்லை


பல மொழிகள் பேசும் மாணவர்கள் இருந்தாலும்
நட்புக்கு மட்டும் மொழி இருந்ததில்லை


வகுப்பை தவிர கல்லூரியின் மற்ற இடங்களில்
நாம் கால் வைக்காத இடமில்லை


வந்த முதல் நாளில், தெரிந்தவர் தவிர
வேறொருவருடன் பேசி நினைவில்லை


ஒரே வாரத்தில் மாமன் மச்சான் உறவு
எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை


விடுமுறை விட்டாலும், வீடு திரும்பவில்லை
நட்புக்கு மட்டும் என்றும் விடுமுறையில்லை


இப்படியெல்லாம் பழகிய நமக்கு இன்று
யார் யார் எங்கிருக்கிறோம் என்பதே தெரியவில்லை


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்,


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

பாரதியின் அச்சம் இல்லை அச்சம் இல்லை !!..


அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே
இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரோடு போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

பச்சைஉநே ஐந்து வெ படைகள் வந்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

Monday, January 4, 2010

அயல் தேசத்து ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதழ்


இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை

வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை


இதோ அயல் தேசத்து ஏழைகளின்

கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்

விசா அரிப்புகளோடும்
வருகின்ற

கடிதங்களை நினைத்து நினைத்து

பரிதாபப்படத்தான் முடிகிறது


நாங்கள் பூசிக்கொள்ளும்

சென்டில் வேண்டுமானால்

வாசனை இருக்கலாம்

ஆனால் வாழ்க்கையில்..?


தூக்கம் விற்ற காசில்தான்

துக்கம் அழிக்கின்றோம்!


ஏக்கம் என்ற நிலையிலேயே

இளமை கழிக்கின்றோம்


எங்களின் நிலாக்கால

நினைவுகளையெல்லாம்

ஒரு விமானப்பயணத்தினூடே

விற்றுவிட்டு

கனவுகள்

புதைந்து விடுமெனத் தெரிந்தே

கடல் தாண்டி வந்திருக்கிறோம்


மர உச்சியில் நின்று

ஒரு தேன்கூட்டை கலைப்பவன் போல!


வாரவிடுமுறையில்தான்

பார்க்க முடிகிறது

இயந்திரமில்லாத மனிதர்களை!


அம்மாவின் ஸ்பரிசம்

தொட்டு எழுந்த நாட்கள்

கடந்து விட்டன!


இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு

எழுந்த நாட்கள் கசந்து விட்டன!


பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்

கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு

நேர கனவுக்குள் வந்து வந்து

காணாமல் போய்விடுகிறது!


நண்பர்களோடு ஆற்றில்

விறால் பாய்ச்சல்

மாட்டுவண்டிப் பயணம்

நோன்பு நேரத்துக் கஞ்சி

தெல்க - பம்பரம்- சீட்டு- கோலி என

சீசன் விளையாட்டுக்கள்!


ஒவ்வொரு

ஞாயிற்றுகிழமையாய் எதிர்பார்த்து

விளையாடி மகிழ்ந்த உள்ளூர்

உலகக்கோப்பை கிரிக்கெட்!


இவைகளை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம்

விசாவும் பாஸ்போட்டும் வந்து

விழிகளை நனைத்து விடுகிறது

வீதிகளில் ஒன்றாய்

வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்

மாப்பிள்ளை அலங்காரம்

கூடிநின்று கிண்டலடித்தல்

கல்யாண நேரத்து பரபரப்பு!


பழையசடங்குகள்

மறுத்துப் போராட்டம்

பெண்வீட்டார் மதிக்கவில்லை

எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!


சாப்பாடு பறிமாரும் நேரம்

எனக்கு நிச்சயத்தவளின் ஓரப்பார்வை

மறுவீடு சாப்பாட்டில்

மணமகளின் ஜன்னல் பார்வை!


இவையெதுவுமே கிடைக்காமல்

கண்டிப்பாய் வரவேண்டும்


என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக

சங்கடத்தோடு

ஒரு

தொலைபேசி வாழ்த்தூனூடே

தொலைந்து விடுகிறது

எங்களின் நீ..ண்ட நட்பு

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?


நாங்கள் அயல் தேசத்து

ஏழைகள்தான்!


காற்றிலும் கடிதத்திலும்

வருகின்ற சொந்தங்களின்

நண்பர்களின் மரணசெய்திக்கெல்லாம்

அரபிக்கடல் மட்டும் தான்

ஆறுதல் தருகிறது!

ஆம்

இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்

ஒரு கடலைத்தாண்டிய

கண்ணீரிலேயே கரைந்துவிடுகிறார்கள்!

இறுதிநாள்நம்பிக்கையில்தான்

இதயம் சமாதனப்படுகிறது!


இருப்பையும் இழப்பையும்

கணக்கிட்டு பார்த்தால்

எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்

பெற்ற குழந்தையின்

முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு

முதல் பார்வை முதல் கழிவு

தினாரும்- திராமும்

தந்துவிடுமா?


கிள்ளச்சொல்லி குழந்தை அழும் சத்ததை

தொலைபேசியில் கேட்கிறோம்!


கிள்ளாமலேயே

நாங்கள் தொலைவில் அழும் சத்தம்

யாருக்குக் கேட்குமோ?


அயல்தேசம் செல்லமறுத்து

அடம்பிடிக்கும் மனசிடம்

தங்கையின் திருமணமும்

தந்தையின் கடனும்

பொருளாதாரமும் வந்து

சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது

மீண்டும் அயல்தேசத்திற்கு வந்தேன் !

- அருண்